வீடு
பூமி பிரபஞ்சத்தில் ஏன் பெயரில் ஒரு புள்ளி !!
Tuesday, November 2, 2010
Wednesday, January 13, 2010
சிங்கார சென்னைக்கு...சிங்கபூரிலிருந்து....
"இங்கிருப்பது என்ன இல்லை??" என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போது..."எண்ணம்" இல்லை என்பது சற்று தாமதமாகவே புரிந்தது...
அடிக்கு ஒன்று என்று அடுக்கி வெய்த்திருக்கும் "குப்பைதொட்டி",அளவுக்கு மேல் செலவு செய்யும் அரசாங்கம்,அப்படியே...குப்பையை வீசினாலும் அபராதம்...
இங்கே இருக்கும் சுத்தத்திற்கு, இவை அணைத்தும் காரணமில்லை என்பதை புரியவைத்தாள் ஐந்து வயது சிறுமி ஒருத்தி !!!
தாய் வாங்கி தந்த "Lolly pop" ... பேருந்திற்குள் நுழைவதற்குள் முடித்துவிட்டாள் !!!
தாய் தந்த காகிதத்தில் வாயை துடைத்து விட்டு ....அதை தன பாக்கெட் பைக்குள் ..அழகாக மடித்து வைத்துக்கொண்டாள் !!!
அடுத்த ஸ்டாப்பில் இறங்கியதும்அங்குள்ள தொட்டியில் போட்டாள்..
எப்போது வரும் இந்த ஒரு பழக்கம் ???? நம் குழந்தைகளிடம்...
தொட்டில் பழக்கத்திற்கும்...தொடக்கம் வேண்டும் !!!
தொடங்குவது நாமாக இருக்க வேண்டும் !!!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!!!!
"இங்கிருப்பது என்ன இல்லை??" என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போது..."எண்ணம்" இல்லை என்பது சற்று தாமதமாகவே புரிந்தது...
அடிக்கு ஒன்று என்று அடுக்கி வெய்த்திருக்கும் "குப்பைதொட்டி",அளவுக்கு மேல் செலவு செய்யும் அரசாங்கம்,அப்படியே...குப்பையை வீசினாலும் அபராதம்...
இங்கே இருக்கும் சுத்தத்திற்கு, இவை அணைத்தும் காரணமில்லை என்பதை புரியவைத்தாள் ஐந்து வயது சிறுமி ஒருத்தி !!!
தாய் வாங்கி தந்த "Lolly pop" ... பேருந்திற்குள் நுழைவதற்குள் முடித்துவிட்டாள் !!!
தாய் தந்த காகிதத்தில் வாயை துடைத்து விட்டு ....அதை தன பாக்கெட் பைக்குள் ..அழகாக மடித்து வைத்துக்கொண்டாள் !!!
அடுத்த ஸ்டாப்பில் இறங்கியதும்அங்குள்ள தொட்டியில் போட்டாள்..
எப்போது வரும் இந்த ஒரு பழக்கம் ???? நம் குழந்தைகளிடம்...
தொட்டில் பழக்கத்திற்கும்...தொடக்கம் வேண்டும் !!!
தொடங்குவது நாமாக இருக்க வேண்டும் !!!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!!!!
Thursday, January 7, 2010
2*10+6.....இருபத்தாறாஆஆஆஆஆ ????
விலகி ஓடினாலும் வயது விடுவதில்லை !!!
ஆம் நான் இப்போது இருபத்தாறு !!!
ஊரார் சொல்கிறார்கள் ...இது கல்யாண வயதாம்...
உள்ளதை சொல்கிறேன்..குழப்பம் குறையவில்லை!!!
நேற்று வரை ..
விட்டத்தை பார்த்து வட்ட "புகை" விட்ட நண்பன்..
இன்று..
வாடை பிடிக்கவில்லை... வாழ்க்கையை பார்த்துக்கொள்..
என்று அறிவுரை சொல்கிறான்...
திருமண வாழ்க்கையின் ஒத்திகை காலமாம்..
மாப்பிள்ளை சந்தையில்..மயிறுக்கும் மதிப்பு உண்டாம்...
எட்டிபார்க்கும் ஒன்றிரண்டு வெள்ளை முடியும்...
ஏளனமாய் சிரிக்கிறது..
திருமணம் ஒரு தீர்க்கதரிசனம்...
சொர்கத்தின் கதவு ..என்கிறான் ஒருவன்...
திருமணம் என்பது அறியாமை..
Nighty அணிந்த நரகம்..என்கிறான் ஒருவன்...
எது எப்படியோ..
விட்டு விலகினாலும் வயது விடுவதில்லை...
ஆம் நான் இப்போது இருபத்தாறு !!!
ஊரார் சொல்கிறார்கள் ...இது கல்யாண வயதாம்...
உள்ளதை சொல்கிறேன்..குழப்பம் குறையவில்லை!!!
நேற்று வரை ..
விட்டத்தை பார்த்து வட்ட "புகை" விட்ட நண்பன்..
இன்று..
வாடை பிடிக்கவில்லை... வாழ்க்கையை பார்த்துக்கொள்..
என்று அறிவுரை சொல்கிறான்...
திருமண வாழ்க்கையின் ஒத்திகை காலமாம்..
மாப்பிள்ளை சந்தையில்..மயிறுக்கும் மதிப்பு உண்டாம்...
எட்டிபார்க்கும் ஒன்றிரண்டு வெள்ளை முடியும்...
ஏளனமாய் சிரிக்கிறது..
திருமணம் ஒரு தீர்க்கதரிசனம்...
சொர்கத்தின் கதவு ..என்கிறான் ஒருவன்...
திருமணம் என்பது அறியாமை..
Nighty அணிந்த நரகம்..என்கிறான் ஒருவன்...
எது எப்படியோ..
விட்டு விலகினாலும் வயது விடுவதில்லை...
Wednesday, November 4, 2009
மதிப்பிடுதல் நேரம்(Appraisal time !!!)
மதிப்பிடுதல் நேரம்.....
வருடத்திற்கு ஒருமுறை வரும் வயிதெரிச்சலும் வசந்தமும் !!!
ஆம்..
வருவது வந்தால் வசந்தம் தான்..
வேறொருவனுக்கு போனால்.. வயிதெரிச்சல் தான் !!!
இது சதவிகிதத்தில் சடுகுடு ஆடும் நேரம்!!!
நகருக்கு வெளியே வாங்கிய புது வீடு..
தவணை முறையில் வாங்கிய T.V.
எதிர்நோக்கி காத்திருந்தது..இந்த ஒரு மாதம்!!!
அவளுடேய சம்பளம் அறுவது சதவிகிதம் வுயர்ந்தால் ..
என்னுடையே மதிப்பு எண்பது சதவிகிதம் சரியுமே?? ..
ஒரு கணவனின் கவலை மாதம் !!!
நேற்று வரை நன்றாக பேசிய நண்பன்..
இன்று முறைத்து பார்த்தான்..கவலை முகத்தோடு..
அவனுக்கு தெரியவில்லை எனக்கு கிடைத்தது எட்டு சதவிதம்தான்!!!
கேட்டால் "confidential” ஆம்!!!
பத்து மாதம் பாடுபட்டு உழைத்தால்..
பங்கு சந்தை சரியில்லை..
பேசாமல் இரு !! இல்லை ..
பார்த்துக்கொள் வேறு வேலை!!. என்றார் முதலாளி..
வீட்டு கணக்கின்..
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் இவன்
இன்னொரு வேலை தேடுவது எங்கே ???
வேறு வழி இல்லை..வாயை மூடி கொள்.. என்பர் சிலர்..
நாளைக்கே ராஜினாமா செய்வேன்..
நன்றாக பாடம் புகட்டுவேன் ..என்பர் சிலர்..
எதற்காக புல்லாங்குழல் வேய்துக்கொண்டு..
அடுப்பு வூதுகிரை..என்பர் சிலர்..
ஆம்.. என் வீட்டின் அடுப்பு எரிய..நான் ஊதுகுழல் தான்..
புல்லாங்குழல் இல்லை !!!
வருடத்திற்கு ஒருமுறை வரும் வயிதெரிச்சலும் வசந்தமும் !!!
ஆம்..
வருவது வந்தால் வசந்தம் தான்..
வேறொருவனுக்கு போனால்.. வயிதெரிச்சல் தான் !!!
இது சதவிகிதத்தில் சடுகுடு ஆடும் நேரம்!!!
நகருக்கு வெளியே வாங்கிய புது வீடு..
தவணை முறையில் வாங்கிய T.V.
எதிர்நோக்கி காத்திருந்தது..இந்த ஒரு மாதம்!!!
அவளுடேய சம்பளம் அறுவது சதவிகிதம் வுயர்ந்தால் ..
என்னுடையே மதிப்பு எண்பது சதவிகிதம் சரியுமே?? ..
ஒரு கணவனின் கவலை மாதம் !!!
நேற்று வரை நன்றாக பேசிய நண்பன்..
இன்று முறைத்து பார்த்தான்..கவலை முகத்தோடு..
அவனுக்கு தெரியவில்லை எனக்கு கிடைத்தது எட்டு சதவிதம்தான்!!!
கேட்டால் "confidential” ஆம்!!!
பத்து மாதம் பாடுபட்டு உழைத்தால்..
பங்கு சந்தை சரியில்லை..
பேசாமல் இரு !! இல்லை ..
பார்த்துக்கொள் வேறு வேலை!!. என்றார் முதலாளி..
வீட்டு கணக்கின்..
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் இவன்
இன்னொரு வேலை தேடுவது எங்கே ???
வேறு வழி இல்லை..வாயை மூடி கொள்.. என்பர் சிலர்..
நாளைக்கே ராஜினாமா செய்வேன்..
நன்றாக பாடம் புகட்டுவேன் ..என்பர் சிலர்..
எதற்காக புல்லாங்குழல் வேய்துக்கொண்டு..
அடுப்பு வூதுகிரை..என்பர் சிலர்..
ஆம்.. என் வீட்டின் அடுப்பு எரிய..நான் ஊதுகுழல் தான்..
புல்லாங்குழல் இல்லை !!!
Tuesday, October 27, 2009
ஊரு விட்டு ஊரு வந்து.......
பால் வெண்மையில் படுக்கை உண்டு..
படுத்தாத்தான் தூக்கம் வரலே…
பிசாவும் பாஸ்தா வும் உண்டு..
பசி போக்க தான் வழி இல்லே..
கொட்டி இறைக்க பணம் வுண்டு..
கூடி சிரிக்கே நண்பன் இல்லே..
வானலாவே கட்டிடம் உண்டு..
வாழ்கை தான் பிடிப்பு இல்லே..
அரைகுறை ஆடை பெண்கள் ஆயிரம் உண்டு..
அன்பாய் பேச ஒருத்தி இல்லே..
வாழ்கையில் அனுபவிக்கே ஆயிரம் உண்டு.
வாய் விட்டு சிரிக்கத்தான் வழியும் இல்லே..
திரும்பியே பக்கம் எல்லாம் சொர்க்கம் உண்டு..
தாய் தமிழில் பேச ஆள் இல்லே..
டென்னிசும் பில்லியார்ட்சும் ஆடி பழக ஆசை இல்லே..
தெருவுலே பெட் மேட்ச் போட ஆசை தான் !!
ten டாலர் சிகரெட்டே பிடிக்கே ஆசை இல்லே..
டி கடையில் கிங்க்ஸ் அடிக்கே ஆசை தான்
சொகுசு பஸ் லே உட்கார்ந்து வர ஆசை இல்லே..
சுதந்திரமா footboard அடிக்கே ஆசை தான்.
இங்கே..
கல் வூடைத்து கரி சுமக்கவில்லை நான்..
கம்ப்யூட்டர் லே கலக்கி கொண்டு தான் இருக்கேன்….
இருந்தாலும்..
ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அழைப்பு வரும்போது..
யோசித்து எடுக்கிறேனே அது எதற்கு ??
பலமுறை வீட்டிற்கு பேசினாலும்…
பாசம் குறைவது போல் தோன்றுகிறதே அது எதற்கு??
இயற்கையாய் இருக்க முடியாமல் எந்திரமாய் வாழ்கிறேனே அது எதற்கு??
மொழி மாறிய ஊருக்குள் விழி பிதுங்கி திரிகிரேனே அது எதற்கு??
பத்து நிமிடம் தனியாய் யோசித்தால்..பயம் ஒன்று வருகிறேதே அது எதற்கு??
படுத்தாத்தான் தூக்கம் வரலே…
பிசாவும் பாஸ்தா வும் உண்டு..
பசி போக்க தான் வழி இல்லே..
கொட்டி இறைக்க பணம் வுண்டு..
கூடி சிரிக்கே நண்பன் இல்லே..
வானலாவே கட்டிடம் உண்டு..
வாழ்கை தான் பிடிப்பு இல்லே..
அரைகுறை ஆடை பெண்கள் ஆயிரம் உண்டு..
அன்பாய் பேச ஒருத்தி இல்லே..
வாழ்கையில் அனுபவிக்கே ஆயிரம் உண்டு.
வாய் விட்டு சிரிக்கத்தான் வழியும் இல்லே..
திரும்பியே பக்கம் எல்லாம் சொர்க்கம் உண்டு..
தாய் தமிழில் பேச ஆள் இல்லே..
டென்னிசும் பில்லியார்ட்சும் ஆடி பழக ஆசை இல்லே..
தெருவுலே பெட் மேட்ச் போட ஆசை தான் !!
ten டாலர் சிகரெட்டே பிடிக்கே ஆசை இல்லே..
டி கடையில் கிங்க்ஸ் அடிக்கே ஆசை தான்
சொகுசு பஸ் லே உட்கார்ந்து வர ஆசை இல்லே..
சுதந்திரமா footboard அடிக்கே ஆசை தான்.
இங்கே..
கல் வூடைத்து கரி சுமக்கவில்லை நான்..
கம்ப்யூட்டர் லே கலக்கி கொண்டு தான் இருக்கேன்….
இருந்தாலும்..
ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அழைப்பு வரும்போது..
யோசித்து எடுக்கிறேனே அது எதற்கு ??
பலமுறை வீட்டிற்கு பேசினாலும்…
பாசம் குறைவது போல் தோன்றுகிறதே அது எதற்கு??
இயற்கையாய் இருக்க முடியாமல் எந்திரமாய் வாழ்கிறேனே அது எதற்கு??
மொழி மாறிய ஊருக்குள் விழி பிதுங்கி திரிகிரேனே அது எதற்கு??
பத்து நிமிடம் தனியாய் யோசித்தால்..பயம் ஒன்று வருகிறேதே அது எதற்கு??
Thursday, October 15, 2009
Kadavullukku...
நீ ஒருவன் தானா ?????????
மன்னனாய் நீ ஆள்வதற்கு ஒரு உலகம் அமைத்தாய்
"மதம்" என்னும் பல மாநிலங்கள் அமைத்தாய் !
"சாதி" என்னும் பல சங்கங்கள் அமைத்தாய் !
"எதிர் கட்சி " வேண்டுமே???
"நாத்திகம் " என்னும் உன்னை நாடாதவர்களை வைத்தாய் !
கட்சி என்றாலே ஊழல் வேண்டுமே??
உன் பேரை சொல்லி ஏமாற்ற.. பல உட்கட்சி பூசல்கள் வைத்தாய் !
மரணம் ஜனனம் என்னும் மாற்ற முடியாத நீதி துறை வைத்தாய் !
உன் சட்டத்தின் ஓட்டையை உடைக்க முடியவில்லை..புலம்புகிறார்கள் மருத்துவர்கள்… !!!
ஏழை.. பணக்காரன்.. என்னும் மாற்ற முடிந்த "நிதி" துறை வைத்தாய் !
ஒரு பக்கம் ஒரே பிரசவத்தில் ஒன்பது உயிரை முளைக்கிறாய் !
மறு பக்கம், அநியாய நோய்களை விட்டு அறுவடை செய்கிறாய் !
விந்தையாகவே உள்ளது உன் "விவசாய துறை" !
இன்பம் துன்பம் என்னும் "கல்வி துறை" வைத்தாய் !
காதல் காமம் என்னும் கலவி பாடமும் அடங்கும் அதில் !!
ஆணும் பெண்ணும் இணைய வைத்தாய் ! ..அதிலே ஒரு இன்பம் வைத்தாய் !கூடி வேலை பார்த்ததற்கு குழந்தை என்னும் கூலி தந்தாய் !
மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறான கொள்கை இருந்தாலும்
மந்தம் இல்லாமல் பொய் கொண்டு இருக்கிறது உன் "மனிதவள மேம்பாட்டு" துறை !!!
ஞாயிற்று கிழமைகளில் பாதிரியார் பாடுகிறார்..
வெள்ளி கிழமைகளில் மௌலானா ஓதுகிறார்..
அணைத்து கிழமைகளிலும் அர்ச்சகர் அலறுகிறார்..
திடமாய் தான் இயங்குகிறது உன் "தகவல் தொழில்நுட்ப துறை" !!!
நிலவுக்கும் ,நேப்டுயுனுக்கும் நெடுஞ்சாலை அமைக்கிறார்களே ??
"வெளியுறவு" துறைக்கு விதை போடுகிறாயோ???
நிலநடுக்கத்தில் நிலம் பிளந்தது..
சுனாமியால் கடல் வளர்ந்தது..
சூறாவளியால் காற்றும் காவு வாங்குகிறது..
உன் முப்படையும் அணுகுண்டு சோதனை நடத்துகிறதோ ??
இங்கே வறட்சி வாட்டுகிறது.. அவசர கால உதவி செய்..!!
மக்கள் குறை கேட்பதற்கு ..மத குருமார்களோ???
மக்கள் மனு ஏந்தி வருகிறார்கள் உன் இருப்பிடம் தேடி…
சர்வாதிகாரியாக நீ சாதனைப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறாய்!!
இங்கே..
மக்களாட்சிக்கு உன் மாநிலங்கள் தான் எங்கள் "மாடல்" கள் !!!
"Minority" , "Majority" என்று மிஞ்சி விடுகிறார்கள்!!!
மன்னனாய் நீ ஆள்வதற்கு ஒரு உலகம் அமைத்தாய்
"மதம்" என்னும் பல மாநிலங்கள் அமைத்தாய் !
"சாதி" என்னும் பல சங்கங்கள் அமைத்தாய் !
"எதிர் கட்சி " வேண்டுமே???
"நாத்திகம் " என்னும் உன்னை நாடாதவர்களை வைத்தாய் !
கட்சி என்றாலே ஊழல் வேண்டுமே??
உன் பேரை சொல்லி ஏமாற்ற.. பல உட்கட்சி பூசல்கள் வைத்தாய் !
மரணம் ஜனனம் என்னும் மாற்ற முடியாத நீதி துறை வைத்தாய் !
உன் சட்டத்தின் ஓட்டையை உடைக்க முடியவில்லை..புலம்புகிறார்கள் மருத்துவர்கள்… !!!
ஏழை.. பணக்காரன்.. என்னும் மாற்ற முடிந்த "நிதி" துறை வைத்தாய் !
ஒரு பக்கம் ஒரே பிரசவத்தில் ஒன்பது உயிரை முளைக்கிறாய் !
மறு பக்கம், அநியாய நோய்களை விட்டு அறுவடை செய்கிறாய் !
விந்தையாகவே உள்ளது உன் "விவசாய துறை" !
இன்பம் துன்பம் என்னும் "கல்வி துறை" வைத்தாய் !
காதல் காமம் என்னும் கலவி பாடமும் அடங்கும் அதில் !!
ஆணும் பெண்ணும் இணைய வைத்தாய் ! ..அதிலே ஒரு இன்பம் வைத்தாய் !கூடி வேலை பார்த்ததற்கு குழந்தை என்னும் கூலி தந்தாய் !
மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறான கொள்கை இருந்தாலும்
மந்தம் இல்லாமல் பொய் கொண்டு இருக்கிறது உன் "மனிதவள மேம்பாட்டு" துறை !!!
ஞாயிற்று கிழமைகளில் பாதிரியார் பாடுகிறார்..
வெள்ளி கிழமைகளில் மௌலானா ஓதுகிறார்..
அணைத்து கிழமைகளிலும் அர்ச்சகர் அலறுகிறார்..
திடமாய் தான் இயங்குகிறது உன் "தகவல் தொழில்நுட்ப துறை" !!!
நிலவுக்கும் ,நேப்டுயுனுக்கும் நெடுஞ்சாலை அமைக்கிறார்களே ??
"வெளியுறவு" துறைக்கு விதை போடுகிறாயோ???
நிலநடுக்கத்தில் நிலம் பிளந்தது..
சுனாமியால் கடல் வளர்ந்தது..
சூறாவளியால் காற்றும் காவு வாங்குகிறது..
உன் முப்படையும் அணுகுண்டு சோதனை நடத்துகிறதோ ??
இங்கே வறட்சி வாட்டுகிறது.. அவசர கால உதவி செய்..!!
மக்கள் குறை கேட்பதற்கு ..மத குருமார்களோ???
மக்கள் மனு ஏந்தி வருகிறார்கள் உன் இருப்பிடம் தேடி…
சர்வாதிகாரியாக நீ சாதனைப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறாய்!!
இங்கே..
மக்களாட்சிக்கு உன் மாநிலங்கள் தான் எங்கள் "மாடல்" கள் !!!
"Minority" , "Majority" என்று மிஞ்சி விடுகிறார்கள்!!!
Mugavurai....
Nanbanin nacharippal inthe inaya thanathil idam vaangi vitten.....
Ini... ithanai payanpaduthi...pala imsaigal thodarum..!!!
Ini... ithanai payanpaduthi...pala imsaigal thodarum..!!!
Subscribe to:
Posts (Atom)