Tuesday, October 27, 2009

ஊரு விட்டு ஊரு வந்து.......

பால் வெண்மையில் படுக்கை உண்டு..
படுத்தாத்தான் தூக்கம் வரலே…
பிசாவும் பாஸ்தா வும் உண்டு..
பசி போக்க தான் வழி இல்லே..
கொட்டி இறைக்க பணம் வுண்டு..
கூடி சிரிக்கே நண்பன் இல்லே..
வானலாவே கட்டிடம் உண்டு..
வாழ்கை தான் பிடிப்பு இல்லே..
அரைகுறை ஆடை பெண்கள் ஆயிரம் உண்டு..
அன்பாய் பேச ஒருத்தி இல்லே..
வாழ்கையில் அனுபவிக்கே ஆயிரம் உண்டு.
வாய் விட்டு சிரிக்கத்தான் வழியும் இல்லே..
திரும்பியே பக்கம் எல்லாம் சொர்க்கம் உண்டு..
தாய் தமிழில் பேச ஆள் இல்லே..

டென்னிசும் பில்லியார்ட்சும் ஆடி பழக ஆசை இல்லே..
தெருவுலே பெட் மேட்ச் போட ஆசை தான் !!
ten டாலர் சிகரெட்டே பிடிக்கே ஆசை இல்லே..
டி கடையில் கிங்க்ஸ் அடிக்கே ஆசை தான்
சொகுசு பஸ் லே உட்கார்ந்து வர ஆசை இல்லே..
சுதந்திரமா footboard அடிக்கே ஆசை தான்.

இங்கே..
கல் வூடைத்து கரி சுமக்கவில்லை நான்..
கம்ப்யூட்டர் லே கலக்கி கொண்டு தான் இருக்கேன்….
இருந்தாலும்..
ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அழைப்பு வரும்போது..
யோசித்து எடுக்கிறேனே அது எதற்கு ??
பலமுறை வீட்டிற்கு பேசினாலும்…
பாசம் குறைவது போல் தோன்றுகிறதே அது எதற்கு??
இயற்கையாய் இருக்க முடியாமல் எந்திரமாய் வாழ்கிறேனே அது எதற்கு??
மொழி மாறிய ஊருக்குள் விழி பிதுங்கி திரிகிரேனே அது எதற்கு??
பத்து நிமிடம் தனியாய் யோசித்தால்..பயம் ஒன்று வருகிறேதே அது எதற்கு??

No comments:

Post a Comment